பெண்ணின் கற்பெனும் மடமை:
கற்பு கற்பு.... என சொல்லி பெண்களை முட்டாளாக்கும் மாய வலையை தமிழ் சினிமாக்கள் எப்போதும் விரித்துக்கொண்டே இருக்கும்.
நான் அடிகடி சினிமாக்களை உதாரணமாக சொல்ல காரணம்... சினிமா என்பது ஒரு இலக்கியத்தின் தோன்றல், பாமரனைகூட அரசியல் பேச வைத்துவிடும்.
சினிமாக்களில் பழைய படங்களில் , ஒரு பெண் ஒரு கயவனால் கற்பழிக்கப்பட்டால் , அடுத்த காட்சியே அந்த இயக்குனரின் படைப்பில் அவள் தன்னை தானே குத்திக்கொண்டு இறந்து விடுவாள் அல்லது அவள் தற்கொலைக்கு முயன்று நாயகனால் காப்பாற்றபட்டு மீண்டும் அந்த கயவனுக்கே திருமணம் செய்து வைக்கப்படுவாள். இது பெண்ணடிமையின் முதல் ஃபார்முலா.
எதார்த்தத்தில் கற்பு என்பது , உடலுக்கு அப்பார்பட்டது. கற்பு என்பது மனத்தின் எண்ணவோட்டத்தின் பிரதிபளிப்பு.
சிலரால் கொடூரமான முறையில் பாலியல்பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணின் வாழ்கை அத்தோடு முடிந்ததா என்ன!
அதில் அவள் செய்த தவறு என்ன?
இன்று இணைய தளத்தில் பெண்கள், அவர்கள் அறியாத நிலையில் அவர்கள் மலம் கழிப்பதை , சிறுநீர் கழிப்பதை , குளிப்பதை படமெடுத்து விட்டுவிடுகிறார்கள். இதனால் அந்த பெண்ணின் கற்பு போய் விட்டதா...! வாழ்வே முடிந்து விட்டதா... ?
கற்புக்கு விளக்கம் புரியாதவர்கள் , பெண்களின் உடலில் இன்னும் கற்பை தேடிக்கொண்டே தான் இருக்கிறார்.
வெறும் பெண்ணின்உடல் இணையத்தில் சுற்றுவதால் கற்பு போய்விட்டது என நான் கருதியிட்டதே இல்லை.
மிருக பிறப்பை வழியாக கொண்ட நாம் , ஆடையை போட்டுக்கொண்டே சீதோசன பாதுகாப்பு வேண்டியே.,
அதனால் ஒரு ஆடு , மாடு களின் நிர்வாண உடலை பார்க்கும் போது எப்படி தோன்றுகிறதோ அதே படைப்பில் தான், மனித இனமாகிய நாமும்.
இணையதளத்தில் வளம் வரும்அப்பாவி பெண்களே , கலங்காதீர் ... உங்கள் உடல் மட்டுமே தெரிகிறது. உங்கள் கற்பு இன்னும் கலங்கபடவில்லை. தற்கொலைக்கு செல்லாதீர்.
உங்களை படமெடுத்து மிரட்டும் ஆண்மையற்றவனை கண்டு அஞ்சாதீர். அவனுக்கு இனங்காதீர். எதிர்த்து நில்லுங்கள். அவனை துரத்தி அடியுங்கள்.
உங்கள் கற்பை உணரும் ஆண்மகன் , நிச்சயம் சாதாரண ஆண்களை போல அல்லாமல் , ஆழத்தில் எடுத்த முத்தை போல உளவியல் சிந்தனை பெற்றவனாக இருப்பான்.
கற்பு கற்பு.... என சொல்லி பெண்களை முட்டாளாக்கும் மாய வலையை தமிழ் சினிமாக்கள் எப்போதும் விரித்துக்கொண்டே இருக்கும்.
நான் அடிகடி சினிமாக்களை உதாரணமாக சொல்ல காரணம்... சினிமா என்பது ஒரு இலக்கியத்தின் தோன்றல், பாமரனைகூட அரசியல் பேச வைத்துவிடும்.
சினிமாக்களில் பழைய படங்களில் , ஒரு பெண் ஒரு கயவனால் கற்பழிக்கப்பட்டால் , அடுத்த காட்சியே அந்த இயக்குனரின் படைப்பில் அவள் தன்னை தானே குத்திக்கொண்டு இறந்து விடுவாள் அல்லது அவள் தற்கொலைக்கு முயன்று நாயகனால் காப்பாற்றபட்டு மீண்டும் அந்த கயவனுக்கே திருமணம் செய்து வைக்கப்படுவாள். இது பெண்ணடிமையின் முதல் ஃபார்முலா.
எதார்த்தத்தில் கற்பு என்பது , உடலுக்கு அப்பார்பட்டது. கற்பு என்பது மனத்தின் எண்ணவோட்டத்தின் பிரதிபளிப்பு.
சிலரால் கொடூரமான முறையில் பாலியல்பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணின் வாழ்கை அத்தோடு முடிந்ததா என்ன!
அதில் அவள் செய்த தவறு என்ன?
இன்று இணைய தளத்தில் பெண்கள், அவர்கள் அறியாத நிலையில் அவர்கள் மலம் கழிப்பதை , சிறுநீர் கழிப்பதை , குளிப்பதை படமெடுத்து விட்டுவிடுகிறார்கள். இதனால் அந்த பெண்ணின் கற்பு போய் விட்டதா...! வாழ்வே முடிந்து விட்டதா... ?
கற்புக்கு விளக்கம் புரியாதவர்கள் , பெண்களின் உடலில் இன்னும் கற்பை தேடிக்கொண்டே தான் இருக்கிறார்.
வெறும் பெண்ணின்உடல் இணையத்தில் சுற்றுவதால் கற்பு போய்விட்டது என நான் கருதியிட்டதே இல்லை.
மிருக பிறப்பை வழியாக கொண்ட நாம் , ஆடையை போட்டுக்கொண்டே சீதோசன பாதுகாப்பு வேண்டியே.,
அதனால் ஒரு ஆடு , மாடு களின் நிர்வாண உடலை பார்க்கும் போது எப்படி தோன்றுகிறதோ அதே படைப்பில் தான், மனித இனமாகிய நாமும்.
இணையதளத்தில் வளம் வரும்அப்பாவி பெண்களே , கலங்காதீர் ... உங்கள் உடல் மட்டுமே தெரிகிறது. உங்கள் கற்பு இன்னும் கலங்கபடவில்லை. தற்கொலைக்கு செல்லாதீர்.
உங்களை படமெடுத்து மிரட்டும் ஆண்மையற்றவனை கண்டு அஞ்சாதீர். அவனுக்கு இனங்காதீர். எதிர்த்து நில்லுங்கள். அவனை துரத்தி அடியுங்கள்.
உங்கள் கற்பை உணரும் ஆண்மகன் , நிச்சயம் சாதாரண ஆண்களை போல அல்லாமல் , ஆழத்தில் எடுத்த முத்தை போல உளவியல் சிந்தனை பெற்றவனாக இருப்பான்.

No comments:
Post a Comment