மன்ஜி" ஹிந்தி திரைப்படம்.
-செ. நிருபன் சக்ரவர்த்தி.
இது பீகாரை சேர்ந்த தஸ்ராத் மன்ஜி என்பரின் வாழ்கை சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்டது .
திரைப்படத்தில் ஒரு தலீத்தாக நடித்து , கதைக்கு உயிர் கொடுத்த நடிகர் நவாசுதீன் சித்திக் அவர்களுக்கு நன்றிகள் தெரிவித்தே ஆகவேண்டும் .
திரைபடத்தில் காதலுக்கும் , நகைக்சுவைகும் பஞ்சமே இல்லை .
பொதுவாக தலீத்கள் பற்றி திரைப்படங்கள் வருவதே அரிது. ஏன்னெனில், தலீத்கள் இன்னும் முழுமையாக சினிமாக துறைக்குள் நுழையவில்லை . அதனால் முதலில் திரைபடத்தின் இயக்குனர் கேட்டன் மேத்தா அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்தே ஆகவேண்டும் .
திரைப்படம் , ஒரு கணவன் அவனது மனைவி மீது வைத்த காதலின் ஆழத்தை வெளிப்படுத்தியுள்ளது.
திரைப்படம் தலீத் மக்களின் இன்னல்களையும் , ஆதிக்க சாதியிரினரின் அரக்க குணத்தை தெளிவாக திரையிட்டு காண்பித்துள்ளது.
திரைப்பட தொடக்கத்தில் , ஒரு தலீத் இந்தியர் செருப்பு அணிந்து சென்ற குற்றத்திற்க்காக , அவரின் கால் பாதத்தில் லாடம் கட்டும் தண்டனை என , தலீத் பெண் கற்பழிப்பு வரை ஆதிக்க சாதிவெறியை திரைப்படம் தெளிவாக காண்பித்துள்ளது.
டாக்டர் . திரு .அம்பேத்கார் அவர்கள் போராடி சாதி கொடுமையிலிருந்து தலீத்களை மீட்க உருவாகிய சமத்துவ சட்டம் அமலுக்கு வந்த நாளை தலீத் மக்கள் கொண்டுவது , ஒரு உண்மையான தலீதுக்கு திரைப்படம் கவின் மிகு காட்சியாக அமைந்திருகிறது .
தலீத் நக்சலைட்கள் உருவாக்கி , மக்களின் உழைப்பை சுரண்டும் ஆதிக்க சாதி நிலசுவான்தரை தூக்கிலேற்றுவது என ஆயுத புரட்சியின் வடிவத்தை திரைப்படம் செம்மையாக வடிவமைத்துள்ளது .
திரைபடத்தின் மைய கதை என்னவெனில் ,
மன்ஜியின் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக மலையை கடந்து வயலுக்கு செல்லும் போது , தவறி விழுந்து இறந்துவிடுகிறார் . இதனால் மன்ஜி கோவம் கொண்டு , சுமார் முப்பது வருடத்திற்கும் மேலாக தனிவருவனாக அவ்வளவு பெரிய மலையையே உடைத்து சாலை அமைக்கிறார் . தனது மனைவிக்கு ஏற்பட்ட நிலை இனி எவருக்கும் உருவாக கூடாது என லட்சியத்தோடு பல ஆதிக்க சாதியினரின் எதிர்ப்பை கடந்து செய்து முடிக்கிறார் . ஒரு தன்னம்பிக்கை திரைப்படம் .
-செ. நிருபன் சக்ரவர்த்தி.
இது பீகாரை சேர்ந்த தஸ்ராத் மன்ஜி என்பரின் வாழ்கை சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்டது .
திரைப்படத்தில் ஒரு தலீத்தாக நடித்து , கதைக்கு உயிர் கொடுத்த நடிகர் நவாசுதீன் சித்திக் அவர்களுக்கு நன்றிகள் தெரிவித்தே ஆகவேண்டும் .
திரைபடத்தில் காதலுக்கும் , நகைக்சுவைகும் பஞ்சமே இல்லை .
பொதுவாக தலீத்கள் பற்றி திரைப்படங்கள் வருவதே அரிது. ஏன்னெனில், தலீத்கள் இன்னும் முழுமையாக சினிமாக துறைக்குள் நுழையவில்லை . அதனால் முதலில் திரைபடத்தின் இயக்குனர் கேட்டன் மேத்தா அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்தே ஆகவேண்டும் .
திரைப்படம் , ஒரு கணவன் அவனது மனைவி மீது வைத்த காதலின் ஆழத்தை வெளிப்படுத்தியுள்ளது.
திரைப்படம் தலீத் மக்களின் இன்னல்களையும் , ஆதிக்க சாதியிரினரின் அரக்க குணத்தை தெளிவாக திரையிட்டு காண்பித்துள்ளது.
திரைப்பட தொடக்கத்தில் , ஒரு தலீத் இந்தியர் செருப்பு அணிந்து சென்ற குற்றத்திற்க்காக , அவரின் கால் பாதத்தில் லாடம் கட்டும் தண்டனை என , தலீத் பெண் கற்பழிப்பு வரை ஆதிக்க சாதிவெறியை திரைப்படம் தெளிவாக காண்பித்துள்ளது.
டாக்டர் . திரு .அம்பேத்கார் அவர்கள் போராடி சாதி கொடுமையிலிருந்து தலீத்களை மீட்க உருவாகிய சமத்துவ சட்டம் அமலுக்கு வந்த நாளை தலீத் மக்கள் கொண்டுவது , ஒரு உண்மையான தலீதுக்கு திரைப்படம் கவின் மிகு காட்சியாக அமைந்திருகிறது .
தலீத் நக்சலைட்கள் உருவாக்கி , மக்களின் உழைப்பை சுரண்டும் ஆதிக்க சாதி நிலசுவான்தரை தூக்கிலேற்றுவது என ஆயுத புரட்சியின் வடிவத்தை திரைப்படம் செம்மையாக வடிவமைத்துள்ளது .
திரைபடத்தின் மைய கதை என்னவெனில் ,
மன்ஜியின் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக மலையை கடந்து வயலுக்கு செல்லும் போது , தவறி விழுந்து இறந்துவிடுகிறார் . இதனால் மன்ஜி கோவம் கொண்டு , சுமார் முப்பது வருடத்திற்கும் மேலாக தனிவருவனாக அவ்வளவு பெரிய மலையையே உடைத்து சாலை அமைக்கிறார் . தனது மனைவிக்கு ஏற்பட்ட நிலை இனி எவருக்கும் உருவாக கூடாது என லட்சியத்தோடு பல ஆதிக்க சாதியினரின் எதிர்ப்பை கடந்து செய்து முடிக்கிறார் . ஒரு தன்னம்பிக்கை திரைப்படம் .

No comments:
Post a Comment