கோமாதா புத்திரர்கள் சுமக்கட்டும்!’’...................
மத்திய பிரதேசத்தில் மண்டசூர் என்னும் ஊரில் ரயில் நிலையத்தில் வீட்டு உபயோகத்திற்காக இறைச்சி வாங்கிவந்த இஸ்லாமியப் பெண்களை கவுரக்ஷா தள் அமைப்பினர் கடுமையாக தாக்கினர். தாக்கியது மட்டுமல்லாமல் இந்த நிகழ்வை படம் பிடித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். அதில் இனி பசுவைக் கொல்ல நினைத்தால் கூட அவர்களுக்கும் இந்த நிலைதான் என்றும் மிரட்டல் விடுத்துள்ளனர்.
வன்முறை நடந்தபோது வேடிக்கை பார்த்த காவல்துறையினரின் செயலும் கடும் கோப அலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதை வேடிக்கை பார்த்த பொதுமக்களும் தடுக்க முயலாமல் கைப்பேசியில் படம் எடுத்தபடி இருந்தனர். காவல்துறையினரோ அரை குறை மனதுடன் தாக்கியவர்களை விலக்கி விட முயற்சித்தனர். ஆனால், பல சமயங்களில் அவர்கள் வேடிக்கை பார்த்தபடியே நின்றிருந்தனர்.
இதனால் தாக்குதல் நடத்திய கும்பல் அந்தப் பெண்களை காலால் உதைத்தும், கையால் அடித்தும், கன்னத்தில் அறைந்தும் மோசமாக நடந்து கொண்டது. இதற்கு சற்று முன்னதாக காவல்துறையினருக்கு சிலர் பசு கறியுடன் வருவதாக தகவல் கொடுத்தனர். இதையடுத்து அவர்களைக் கைது செய்வதற்காக காவல்துறையினர் வந்தனர். அந்த சமயத்தில்தான் அப்பெண்கள் இருவரும் தாக்கப்பட்டுக் கொண்டிருந்தனர்.
தாக்கப்பட்டவர்களையே காவல்துறை கைது செய்து அழைத்துச் சென்றது. அப்போதும்கூட அக்கும்பல் அப்பெண்களை தொடர்ந்து விடாமல் தாக்கியபடியே சென்றனராம்.
தாக்குதல் நடத்திய கும்பல் புனித கோமாதாவுக்கு ஜே என்று வாழ்த்தி முழக்கம் போட்டனர். அவர்கள் தாக்கியதில் ஒரு பெண் மயங்கி விழுந்து விட்டார். கிட்டத்தட்ட அரை மணி நேரம் இந்த வன்முறை தாக்குதல் நடந்தது.
பின்னர் காவல்துறையினர் கூறுகையில், இவர்கள் பசுவின் கறியைக் கொண்டு வருவதாக தகவல் கிடைத்தது; இதையடுத்து நாங்கள் அவர்களைக் கைது செய்து இறைச்சியைக் கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பினோம். சோதனையில் அது எருமை மாட்டின் இறைச்சி என்று தெரிய வந்துள்ளது என்றனர்.
இருப்பினும் இரு பெண்கள் மீதும் காவல்துறையினர் வழக்குத் தொடர்ந்துள்ளனராம். இது தொடர்பாக சமுக வலைதளத்தில் கவு ரக்ஷா தள் அமைப்பினர் இந்த தாக்குதல் படத்தை வெளியிட்டு செய்தி ஒன்றை எழுதியுள்ளனர்.
அதில் இனி பசுவைக் கொல்ல மனதால் நினைப்பவர்களுக்கும் இதே தண்டனைதான்; அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி என்று எழுதியுள்ளனர். இச்சம்பவம் குறித்து மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் கூறும் போது பொதுமக்களின் கோபம் நியாமானதே!
பசுவை அவர்கள் தாயாக மதிக்கின்றனர். ஆகவே அவர்கள் இவ்வாறு நடந்துள்ளனர். இருப்பினும் தாக்குதல் கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளார்.
வட மாநிலங்கள் முழுவதும் சங் பரிவார்களின் போக்கு பாசிசத்தின் உச்சத்தில் நிர்வாண ஆட்டம் போடுகிறது.
ஒரு ஜனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமா? அரசமைப்புச் சட்டம் என்ற ஒன்று இருக்கிறதா? தடி எடுத்தவன் தண்டல்காரன் என்ற தறுதலைத்தனம், தலைக்கனம் தாண்டவம் ஆடுகிறது. நாடாளுமன்றத் தில் தட்டிக் கேட்ட மேனாள் முதலமைச்சரையே (மாயாவதியை) தரக்குறைவாக ஆளும் பி.ஜே.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் நாக்கில் நரம்பின்றி ஏசித் தீர்க்கிறார்.
இதைவிட இன்னும் மோசமான, கேவலமான நிகழ்வுகள் நாட்டில் நடந்தாலும் இந்தியாவின் பிரதமர் கண்டு கொள்ளவே மாட்டார் - உள்துறை அமைச்சரும் வாய்த் திறக்க மாட்டார்.
குஜராத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் ‘செத்த மாட்டைத் தூக்கமாட்டோம் - கோமாதா புத்திரர்களே - உங்கள் மாதாவை நீங்களே தூக்குங்கள் - சுமந்து சொல்லுங்கள்!’ என்று கூறிச் சென்றனரே - அந்த நிலைதான் இந்த இந்துத்துவாவாதிகளைக் கொஞ்சம் கீழே இறங்கி வரச் செய்யும்.
நாடு முழுவதும் இந்த நிலை தொடரட்டும், தொடரட்டும்!
அப்பொழுதுதான் ஆதிக்க வெறியர்கள் இறங்கி வருவார்கள் என்று எதிர்பார்க்கலாம்!
மத்திய பிரதேசத்தில் மண்டசூர் என்னும் ஊரில் ரயில் நிலையத்தில் வீட்டு உபயோகத்திற்காக இறைச்சி வாங்கிவந்த இஸ்லாமியப் பெண்களை கவுரக்ஷா தள் அமைப்பினர் கடுமையாக தாக்கினர். தாக்கியது மட்டுமல்லாமல் இந்த நிகழ்வை படம் பிடித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். அதில் இனி பசுவைக் கொல்ல நினைத்தால் கூட அவர்களுக்கும் இந்த நிலைதான் என்றும் மிரட்டல் விடுத்துள்ளனர்.
வன்முறை நடந்தபோது வேடிக்கை பார்த்த காவல்துறையினரின் செயலும் கடும் கோப அலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதை வேடிக்கை பார்த்த பொதுமக்களும் தடுக்க முயலாமல் கைப்பேசியில் படம் எடுத்தபடி இருந்தனர். காவல்துறையினரோ அரை குறை மனதுடன் தாக்கியவர்களை விலக்கி விட முயற்சித்தனர். ஆனால், பல சமயங்களில் அவர்கள் வேடிக்கை பார்த்தபடியே நின்றிருந்தனர்.
இதனால் தாக்குதல் நடத்திய கும்பல் அந்தப் பெண்களை காலால் உதைத்தும், கையால் அடித்தும், கன்னத்தில் அறைந்தும் மோசமாக நடந்து கொண்டது. இதற்கு சற்று முன்னதாக காவல்துறையினருக்கு சிலர் பசு கறியுடன் வருவதாக தகவல் கொடுத்தனர். இதையடுத்து அவர்களைக் கைது செய்வதற்காக காவல்துறையினர் வந்தனர். அந்த சமயத்தில்தான் அப்பெண்கள் இருவரும் தாக்கப்பட்டுக் கொண்டிருந்தனர்.
தாக்கப்பட்டவர்களையே காவல்துறை கைது செய்து அழைத்துச் சென்றது. அப்போதும்கூட அக்கும்பல் அப்பெண்களை தொடர்ந்து விடாமல் தாக்கியபடியே சென்றனராம்.
தாக்குதல் நடத்திய கும்பல் புனித கோமாதாவுக்கு ஜே என்று வாழ்த்தி முழக்கம் போட்டனர். அவர்கள் தாக்கியதில் ஒரு பெண் மயங்கி விழுந்து விட்டார். கிட்டத்தட்ட அரை மணி நேரம் இந்த வன்முறை தாக்குதல் நடந்தது.
பின்னர் காவல்துறையினர் கூறுகையில், இவர்கள் பசுவின் கறியைக் கொண்டு வருவதாக தகவல் கிடைத்தது; இதையடுத்து நாங்கள் அவர்களைக் கைது செய்து இறைச்சியைக் கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பினோம். சோதனையில் அது எருமை மாட்டின் இறைச்சி என்று தெரிய வந்துள்ளது என்றனர்.
இருப்பினும் இரு பெண்கள் மீதும் காவல்துறையினர் வழக்குத் தொடர்ந்துள்ளனராம். இது தொடர்பாக சமுக வலைதளத்தில் கவு ரக்ஷா தள் அமைப்பினர் இந்த தாக்குதல் படத்தை வெளியிட்டு செய்தி ஒன்றை எழுதியுள்ளனர்.
அதில் இனி பசுவைக் கொல்ல மனதால் நினைப்பவர்களுக்கும் இதே தண்டனைதான்; அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி என்று எழுதியுள்ளனர். இச்சம்பவம் குறித்து மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் கூறும் போது பொதுமக்களின் கோபம் நியாமானதே!
பசுவை அவர்கள் தாயாக மதிக்கின்றனர். ஆகவே அவர்கள் இவ்வாறு நடந்துள்ளனர். இருப்பினும் தாக்குதல் கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளார்.
வட மாநிலங்கள் முழுவதும் சங் பரிவார்களின் போக்கு பாசிசத்தின் உச்சத்தில் நிர்வாண ஆட்டம் போடுகிறது.
ஒரு ஜனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமா? அரசமைப்புச் சட்டம் என்ற ஒன்று இருக்கிறதா? தடி எடுத்தவன் தண்டல்காரன் என்ற தறுதலைத்தனம், தலைக்கனம் தாண்டவம் ஆடுகிறது. நாடாளுமன்றத் தில் தட்டிக் கேட்ட மேனாள் முதலமைச்சரையே (மாயாவதியை) தரக்குறைவாக ஆளும் பி.ஜே.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் நாக்கில் நரம்பின்றி ஏசித் தீர்க்கிறார்.
இதைவிட இன்னும் மோசமான, கேவலமான நிகழ்வுகள் நாட்டில் நடந்தாலும் இந்தியாவின் பிரதமர் கண்டு கொள்ளவே மாட்டார் - உள்துறை அமைச்சரும் வாய்த் திறக்க மாட்டார்.
குஜராத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் ‘செத்த மாட்டைத் தூக்கமாட்டோம் - கோமாதா புத்திரர்களே - உங்கள் மாதாவை நீங்களே தூக்குங்கள் - சுமந்து சொல்லுங்கள்!’ என்று கூறிச் சென்றனரே - அந்த நிலைதான் இந்த இந்துத்துவாவாதிகளைக் கொஞ்சம் கீழே இறங்கி வரச் செய்யும்.
நாடு முழுவதும் இந்த நிலை தொடரட்டும், தொடரட்டும்!
அப்பொழுதுதான் ஆதிக்க வெறியர்கள் இறங்கி வருவார்கள் என்று எதிர்பார்க்கலாம்!
No comments:
Post a Comment